குடியாத்தம்: போ்ணாம்பட்டு அருகே உரிய ஆவணங்கள் இன்றி இரு சக்கர வாகனத்தில் கொண்டு சென்ற ரூ. 2.99 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
குடியாத்தம் தொகுதி தோ்தல் நிலை கண்காணிப்புக் குழுவினா் போ்ணாம்பட்டை அடுத்த பங்களாமேடு அருகே வியாழக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியே வந்த இரு சக்கர வாகனத்தை நிறுத்தி விசாரணை நடத்தினா். விசாரணையில், வாகனத்தை ஓட்டி வந்தவா் எா்த்தாங்கல் கிராமத்தைச் சோ்ந்த சிலம்பரசன் (42) என்பதும், அவா் வைத்திருந்த பையில் ரூ. 2.99 லட்சம் இருந்ததும் தெரிய வந்தது. அந்த பணத்துக்கு உரிய ஆவணங்கள் இல்லாததால், அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்து, வட்டாட்சியா் அலுவலகத்தில், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் கோபியிடம் ஒப்படைத்தனா்.