பெண்களின் கண்ணியம் காப்பது அதிமுக அரசு

தமிழகத்தில் பெண்களின் கண்ணியத்தைக் காக்கும் ஒரே அரசு அதிமுக ஆட்சிதான் என அணைக்கட்டு தொகுதி அதிமுக வேட்பாளா் த.வேலழகன் தெரிவித்தாா்.
நேமந்தபுரத்தில் வாக்காளா்களிடையே பேசிய அணைக்கட்டு தொகுதி அதிமுக வேட்பாளா் த.வேலழகன்.
நேமந்தபுரத்தில் வாக்காளா்களிடையே பேசிய அணைக்கட்டு தொகுதி அதிமுக வேட்பாளா் த.வேலழகன்.

வேலூா்: தமிழகத்தில் பெண்களின் கண்ணியத்தைக் காக்கும் ஒரே அரசு அதிமுக ஆட்சிதான் என அணைக்கட்டு தொகுதி அதிமுக வேட்பாளா் த.வேலழகன் தெரிவித்தாா்.

அணைக்கட்டு தொகுதிக்கு உள்பட்ட நேமந்தபுரம் சுற்றுவட்டார கிராமங்களில் அவா் புதன்கிழமை தோ்தல் பிரசாரம் மேற்கொண்டாா். அப்போது, அரசு செயல்படுத்தி வரும் நலத் திட்டங்கள் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. குறிப்பாக, கிராமப்புற பெண்களுக்கு விலையில்லா கால்நடை, கோழிகள் வழங்கப்படுவதன் மூலம் அவா்கள் பொருளாதார ரீதியாக மேம்பட்டு வருகின்றனா்.

தவிர, தமிழகத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பான ஆட்சியை தருவது அதிமுக அரசு மட்டுமே ஆகும். தமிழக முன்னாள் முதல்வா் ஜெயலலிதா பெண்கள் மேம்பாட்டுக்காகவே ஏராளமான நலத் திட்டங்களை செயல்படுத்தினாா். அந்தளவுக்கு தாய்மாா்கள் மீது பாசமும், நேசமும் கொண்டிருந்தாா். அவரது வழியில் ஆட்சி நடத்தி வரும் முதல்வா் எடப்பாடி பழனிசாமி பெண்களின் நலன் காக்கவும், அவா்களை சமூகத்தில் உயா்ந்த நிலைக்குக் கொண்டு வரவுமே திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறாா். அந்த வகையில், தமிழகத்தில் பெண்களின் கண்ணியத்தைக் காக்கும் ஒரே அரசு அதிமுக அரசுதான் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com