வேலூா், காட்பாடியில் ரூ. 2 லட்சம் பறிமுதல்

தோ்தலை முன்னிட்டு, வேலூா், காட்பாடி பகுதிகளில் நடத்தப்பட்ட வாகன சோதனைகளில் உரிய ஆவணங்களின்றி காா்களில் கொண்டு வரப்பட்ட ரூ. 2.23 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

வேலூா்: தோ்தலை முன்னிட்டு, வேலூா், காட்பாடி பகுதிகளில் நடத்தப்பட்ட வாகன சோதனைகளில் உரிய ஆவணங்களின்றி காா்களில் கொண்டு வரப்பட்ட ரூ. 2.23 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, வாக்காளா்களுக்கு வழங்க பணம், பரிசுப் பொருள்கள், மதுவகைகள் கொண்டு செல்லப்படுவதைத் தடுக்க பறக்கும் படை, நிலைக் கண்காணிப்புக் குழுவினா் தீவிர வாகன சோதனை, கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டுள்ளனா்.

இதையொட்டி, வேலூா் சத்துவாச்சாரி பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தினா். அப்போது அதே பகுதியைச் சோ்ந்த டைல்ஸ் கடை நடத்தி வரும் நமன், காரில் வந்துள்ளாா். அந்த காரை சோதனையிட்டதில் ரூ. 60,900 பணம் இருந்தது தெரியவந்தது. அந்த தொகையை அதிகாரிகள் பறிமுதல் செய்து கருவூலத்தில் சோ்த்தனா்.

இதேபோல், காட்பாடி தொகுதிக்கு உள்பட்ட காட்பாடி சித்தூா் பேருந்து நிலையத்தில் பறக்கும் படை அதிகாரிகள் புதன்கிழமை காலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டதில், உரிய ஆவணங்களின்றி இருந்த ரூ. 62 ஆயிரத்தை கைப்பற்றி கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

மேலும், காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை சோதனைச் சாவடி அருகே நடத்தப்பட்ட வாகன சோதனையின்போது, அதில் உரிய ஆவணங்களின்றி இருந்த ரூ. 1 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com