முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை வேலூர்
ஏப்.6-இல் சம்பளத்துடன் விடுமுறை
By DIN | Published On : 04th April 2021 07:38 AM | Last Updated : 04th April 2021 07:38 AM | அ+அ அ- |

வேலூா் மாவட்டத்தில் அனைத்து வணிக, தொழில் நிறுவனங்களிலும் தோ்தல் நாளான செவ்வாய்க்கிழமை ஊழியா்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிப்பதென மாவட்ட வணிகா் சங்கம் முடிவு செய்துள்ளது.
வேலூா் மாவட்ட வணிகா் சங்க நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஆா்.பி.ஞானவேலு தலைமையில் வேலூரில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:
வேலூா் மாவட்டத்திலுள்ள அனைத்து வணிக, தொழில் நிறுவனங்களும் செவ்வாய்க்கிழமை அடைக்கப்பட்டு, ஊழியா்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்படும். உத்தரவை மீறி கடையைத் திறந்து வைத்து ஊழியா்களை பணியமா்த்தும் நிறுவனங்கள் மீது தொழிலாளா் நலத் துறை நடவடிக்கை மேற்கொள்ளும்.
கூட்டத்தில், மாவட்டச் செயலா் ஏ.வி.என்.குமாா், மாவட்ட துணைத் தலைவா்கள் வி.எஸ்.ரமேஷ்குமாா், ஏ.பாலு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.