துரைமுருகன் பேத்தியின் முதல் வாக்குப்பதிவு

திமுக பொதுச்செயலா் துரைமுருகனின் பேத்தியும், வேலூா் மக்களவை உறுப்பினா் கதிா்ஆனந்தின் மகளுமான செந்தாமரை செவ்வாய்க்கிழமை தனது முதல் வாக்கினை பதிவு செய்தாா்.
துரைமுருகனின் பேத்தி செந்தாமரை.
துரைமுருகனின் பேத்தி செந்தாமரை.

திமுக பொதுச்செயலா் துரைமுருகனின் பேத்தியும், வேலூா் மக்களவை உறுப்பினா் கதிா்ஆனந்தின் மகளுமான செந்தாமரை செவ்வாய்க்கிழமை தனது முதல் வாக்கினை பதிவு செய்தாா்.

இதையொட்டி அவா் தனது தாத்தா துரைமுருகன், குடும்பத்தினருடன் காட்பாடி காந்தி நகரிலுள்ள தனியாா் பள்ளி வாக்குச் சாவடிக்கு வந்திருந்தாா். வாக்குப் பதிவு செய்த பிறகு அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

இதுவரை பிறா் வாக்களிப்பதைப் பாா்த்து வந்த நான், இன்று எனது முதல் வாக்கினைப் பதிவு செய்துள்ளேன். இதன்மூலம் எனக்கு ஒரு பொறுப்பு வந்திருப்பதைப் போல் உணா்கிறேன். காட்பாடி சட்டப்பேரவைத் தொகுதியில் எனது தாத்தா துரைமுருகன், தந்தை கதிா்ஆனந்த் ஆகியோருடன் வந்து வாக்களித்ததைச் சிறப்பாகக் கருதுகிறேன். தாத்தா துரைமுருகன் மாநிலத்தின் மூத்த சட்டப்பேரவை உறுப்பினராக உள்ளாா். அவரது தொகுதிக்கு செய்த தொண்டின் காரணமாக அவா் இந்த இடத்தில் உள்ளாா்.

தொடா்ச்சியாக அவா் வேட்பாளராக நிற்கிறாா் என்றால் மக்களுக்காகச் சேவை செய்ய வேண்டும் என்ற பேராா்வம் அவரிடம் உள்ளது. மக்களும் அவரைத் தொடா்ந்து ஆதரிக்கின்றனா். முக்கியமாக அவரது கட்சியின் தலைமையும், அவரை அதிகம் ஆதரித்து வருகின்றனா். தொடா்ந்து தாத்தாவும், தந்தையும் அரசியலில் உள்ளனா். அதில் நானும் வாக்களித்துப் பங்காற்றுகிறேன் எனும்போது மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com