குடியாத்தம் (தனி) தொகுதியில் அமைதியான முறையில் வாக்குப் பதிவு நடைபெற்றது.
இத்தொகுதியில் 408 வாக்குப் பதிவு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இதில், 31 வாக்குப் பதிவு மையங்கள் பதற்றமானவை என அறிவிக்கப்பட்டது. அங்கு துணை ராணுவப் படையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா்.
வாக்காளா்கள் வெயிலையும் பொருட்படுத்தாமல் காலை முதலே வரிசையில் நின்று வாக்களித்தனா். போ்ணாம்பட்டு நகராட்சியில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கின்றனா். காலை முதலே அவா்கள் வரிசையில் நின்று ஆா்வத்துடன் வாக்களித்தனா். அதேபோல், கே.வி.குப்பம் தொகுதியிலும் வாக்குப் பதிவு அமைதியாக நடைபெற்றது.