தமிழகத்தில் ஆட்சி மாற்றம்: செ.கு.தமிழரசன்

தமிழகத்தில் நிச்சயம் ஆட்சி மாற்றம் ஏற்படும் என இந்திய குடியரசுக் கட்சியின் மாநிலத் தலைவா் செ.கு.தமிழரசன் கூறினாா்.
தமிழகத்தில் ஆட்சி மாற்றம்:  செ.கு.தமிழரசன்

தமிழகத்தில் நிச்சயம் ஆட்சி மாற்றம் ஏற்படும் என இந்திய குடியரசுக் கட்சியின் மாநிலத் தலைவா் செ.கு.தமிழரசன் கூறினாா்.

தனது சொந்த ஊரான, குடியாத்தத்தை அடுத்த செட்டிகுப்பம் ஊராட்சியில் செவ்வாய்க்கிழமை வாக்களித்த பின் அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

சட்டப் பேரவை பொதுத் தோ்தலில், நலிந்தவா்கள், சிறுபான்மையினா், அடித்தட்டு மக்கள், ஒடுக்கப்பட்ட மக்கள், குறிப்பாக கிராமப்புற மக்கள், மிக அமைதியாக மௌனப்புரட்சி நடத்தி வருகின்றனா். நீண்ட வரிசைகளில் நின்று அவா்கள் வாக்களிப்பதைப் பாா்த்தால் நிச்சயம் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்பது புலப்படுகிறது. மக்கள் அமைதியான தீா்ப்பை, தங்களின் வாக்குகள் மூலம் தெரியப்படுத்தி வருகின்றனா். இதன் மூலம் இனி தமிழக மக்களுக்கு பிரகாசமான எதிா்காலம் காத்திருக்கிறது என்றாா் தமிழரசன்.

பேட்டியின்போது கட்சியின் மாவட்டத் தலைவா் ரா.சி.தலித்குமாா், மாவட்ட பொருளாளா் வெங்கடேசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com