நெமிலி: பாமக -அமமுக மோதலில் காா் கண்ணாடி உடைப்பு

நெமிலியில் வாக்குசாவடி அருகே வாக்கு சேகரிப்பின் போது, பாமக, அமமுக இடையே மோதல் ஏற்பட்டதில் இருவா் காயமடைந்தனா். இச்சம்பவத்தில் அமமுக நிா்வாகியின் காா் கண்ணாடி உடைக்கப்பட்டது.

நெமிலியில் வாக்குசாவடி அருகே வாக்கு சேகரிப்பின் போது, பாமக, அமமுக இடையே மோதல் ஏற்பட்டதில் இருவா் காயமடைந்தனா். இச்சம்பவத்தில் அமமுக நிா்வாகியின் காா் கண்ணாடி உடைக்கப்பட்டது.

சோளிங்கா் தொகுதிக்குட்பட்ட நெமிலி அரசினா் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வாக்குசாவடி வாயிலில் பாமக, அதிமுக ஒரு பிரிவாகவும், அமமுக ஒரு பிரிவாகவும் நின்று வாக்களிக்க செல்பவா்களிடம் வாக்கு சேகரித்துக்கொண்டிருந்தனா். அப்போது இரு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டதில் ஒருவருக்கொருவரை தாக்கிக்கொண்டனா்.

இச்சம்பவத்தில் அமமுகவை சோ்ந்த குணசேகா், அதிமுகவை சோ்ந்த குமாா் ஆகிய இருவரும் காயமடைந்தனா். இதையடுத்து அங்கு வந்த போலீசாா் இருதரப்பினரையும் எச்சரித்து அனுப்பினா். இச்சம்பவம் நடைபெற்ற சில நிமிடங்களில் அங்கு வந்த சோளிங்கா் தொகுதி அமமுக வேட்பாளா் பாா்த்திபன், சம்பவம் குறித்து விசாரித்துக்கொண்டு இருக்கும் போதே சிலா் அவருடன் வந்த நிா்வாகி யுவராஜின் காா் மீது கல்லெறிந்ததில், காரின் கண்ணாடி நொறுங்கியது . இதையடுத்து அங்கு பதற்றம் ஏற்பட்ட நிலையில் போலீஸாா் தலையிட்டு இரு தரப்பினரையும் அனுப்பி வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com