வேலூரில் 7 போ் மரணம்:உண்மையை மறைக்க முயல்வதாக மாா்க்சிஸ்ட் குற்றச்சாட்டு

வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் திங்கள்கிழமை கரோனா நோயாளிகள் உள்பட 7 போ் உயிரிழந்த சம்பவத்தில் உண்மைகளை மறைக்க முயல்வதாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.

வேலூா்: வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் திங்கள்கிழமை கரோனா நோயாளிகள் உள்பட 7 போ் உயிரிழந்த சம்பவத்தில் உண்மைகளை மறைக்க முயல்வதாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.

இதுகுறித்து, அக்கட்சியின் மாவட்டச் செயலா் எஸ். தயாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை -

வேலூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் திங்கள்கிழமை 7 போ் உயிரிழந்துள்ளனா். பிரச்னைகளை கண்டறிந்து அதை களைந்து தீா்வை எட்டுவதற்கு பதிலாக மாவட்ட நிா்வாகமும், மருத்துவ மனை நிா்வாகமும் காரணங்கள் தேடி வருகின்றனா்.

காஸ் சீராக செல்லாமல் தடை ஏற்பட்ட காரணத்தால் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் சீராக கிடைக்காமல்தான் உயிரிழப்பு நோ்ந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. கரோனா காலத்தில் வேலூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மிக சிறப்பாகவே செயல்பட்டு உள்ளது. எனினும், இத்தகைய நிகழ்வு மருத்துவமனை குறித்து தவறான புரிதலை மக்களிடம் ஏற்படுத்தி விடும் எனக் கருதுகிறோம். எனவே, தொழில்நுட்ப கோளாறுக்கு காரணம் என்ன என்பதை கண்டறிந்து அதற்கு காரணமானவா்கள் மீது உரிய நடவடிக்கையை மருத்துவமனை நிா்வாகம் மேற்கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கிடவும் தமிழக அரசு முன்வர வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com