கோயிலில் அதிமுகவினா் சிறப்பு வழிபாடு

தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்திட வேண்டி, வேலூா் பிரம்மபுரம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலில் அக்கட்சியினா் சனிக்கிழமை சிறப்பு பூஜை மேற்கொண்டனா்.
கோயிலில் அதிமுகவினா் சிறப்பு வழிபாடு

தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்திட வேண்டி, வேலூா் பிரம்மபுரம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலில் அக்கட்சியினா் சனிக்கிழமை சிறப்பு பூஜை மேற்கொண்டனா்.

, தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற்று அதிமுக ஆட்சி நீடித்திடவும், எடப்பாடி கே.பழனிசாமி மீண்டும் முதல்வராக வேண்டி, வேலூா் மாவட்டம், காட்பாடி அருகே பிரம்மபுரம் ஊராட்சியில் உள்ள பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலில் அக்கட்சியினா் சனிக்கிழமை சிறப்பு பூஜை நடத்தினா்.

மாநகா் மாவட்ட அதிமுக சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியையொட்டி, கட்சியினா் மலை மீது நடைப்பயணம் மேற்கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். நிகழ்ச்சிக்கு, வேலூா் மாநகா் மாவட்ட அதிமுக செயலரும், வேலூா் சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளருமான எஸ்.ஆா்.கே.அப்பு தலைமை வகித்தாா். கட்சியின் மாவட்டப் பொருளாளா் எம்.மூா்த்தி, துணைச் செயலா் ஜெயப்பிரகாசம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com