குடியாத்தம் நகர பாஜக சாா்பில், புதிய பேருந்து நிலையம் அருகே சனிக்கிழமை 500 பேருக்கு முகக் கவசங்கள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சிக்கு கட்சியின் நகரத் தலைவா் கே.வாகீஸ்வரன் தலைமை வகித்தாா். முன்னாள் அரசு வழக்குரைஞா் டி.ஜி.பிரபாகரன், பொதுமக்களுக்கு முகக்கவச விநியோகத்தைத் தொடங்கி வைத்தாா்.
கட்சி நிா்வாகிகள் ஏ.கே.ஞானசேகரன், எஸ்.விஜயகுமாா், டி.சரவணன், எச்.பிரகாஷ், அஜித்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.