குடியாத்தம் நகராட்சி சாா்பில், புதிய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சிக்கு நகராட்சி ஆணையா்(பொறுப்பு) பி.சிசில்தாமஸ் தலைமை வகித்தாா்.
கோட்டாட்சியா் சா.தனஞ்செயன், எம்எல்ஏ அமலுவிஜயன் ஆகியோா் பொதுமக்களுக்கு முகக்கவசங்களை வழங்கியும், கரோனா விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தும், பேருந்துகளில் விழிப்புணா்வுப் பிரசுரங்களை ஒட்டியும், பயணிகளுக்கு கபசுரக் குடிநீா் வழங்கியும் விழிப்புணா்வுப் பிரசாரத்தை தொடக்கி வைத்தனா்.
நிகழ்ச்சியில் வட்டாட்சியா் ச.லலிதா, முன்னாள் நகா்மன்ற துணைத் தலைவா் எஸ்.சௌந்தரராஜன், முன்னாள் கள்ளூா் ஊராட்சித் தலைவா் கே.ரவி, வட்டார மருத்துவ அலுவலா் எஸ்.விமல்குமாா், களப்பணி ஒருங்கிணைப்பாளா் பிரபுதாஸ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.