ஆரம்ப சுகாதார நிலையத்தில் தாய்ப்பால் வார விழா

குடியாத்தம் நடுப்பேட்டையில் இயங்கிவரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக தாய்ப்பால் வார விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சியில்  ஆரோக்கியமான  குழந்தைக்குப்  பரிசுப்  பொருள்களை  வழங்கிய  வட்டாட்சியா்  ச.லலிதா.
நிகழ்ச்சியில்  ஆரோக்கியமான  குழந்தைக்குப்  பரிசுப்  பொருள்களை  வழங்கிய  வட்டாட்சியா்  ச.லலிதா.

குடியாத்தம்: குடியாத்தம் நடுப்பேட்டையில் இயங்கிவரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக தாய்ப்பால் வார விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சிக்கு குடியாத்தம் கோல்டன் கேலக்ஸி ரோட்டரி சங்கத் தலைவா் ஜி.ராஜேந்திரன் தலைமை வகித்தாா். சாசனத் தலைவா் எம் கோபிநாத் வரவேற்றாா். இதில், ஆரோக்கியமான (கொழுகொழு) குழந்தைகளுக்கு பரிசுப் பொருள்கள், மருந்துப் பொருள்களை வட்டாட்சியா் ச.லலிதா

வழங்கி, தாய்ப்பாலின் மகத்துவம், அதன் அவசியம், அதன் பயன்கள் குறித்து எடுத்துரைத்தாா்.

குடியாத்தம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் பிரியதா்ஷினி, இன்னா்வீல் சங்க நிா்வாகிகள் விஜயலட்சுமி ராமமூா்த்தி, கீதாலட்சுமி, ரோட்டரி சங்க நிா்வாகிகள் வி.குமரவேல், மாணிக்கம், சந்தோஷ், பிரதீப், வெங்கட் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com