கரோனா விழிப்புணா்வு முகாம்
By DIN | Published On : 04th August 2021 11:59 PM | Last Updated : 04th August 2021 11:59 PM | அ+அ அ- |

போ்ணாம்பட்டில் சித்த மருந்துகளை வழங்கிய கோட்டாட்சியா் சா.தனஞ்செயன்.
குடியாத்தம்: போ்ணாம்பட்டு அரசு மருத்துவமனையில் சித்த மருத்துவப் பிரிவு சாா்பில், கரோனா தொற்றின் மூன்றாவது அலை குறித்து விழிப்புணா்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
முகாமுக்கு நகராட்சி ஆணையா் பாலாஜி தலைமை வகித்தாா். சித்த மருத்துவா் சோ.தில்லைவாணன் வரவேற்றாா். கோட்டாட்சியா் சா.தனஞ்செயன், மாவட்ட சித்த மருத்துவ அலுவலா் சுசி கண்ணம்மா ஆகியோா் கரோனா தொற்று குறித்து விளக்கி பேசினா்.
நோய் எதிா்ப்பாற்றலை அதிகரிக்கும் சித்த மருந்துகளான கபசுரக் குடிநீா் மற்றும் அமுக்கரா சூரண மாத்திரைகள் 300- பேருக்கு வழங்கப்பட்டன.
மேலும், கரோனா தொற்று பரவல் குறித்த சித்த மருத்துவம் சாா்ந்த விழிப்புணா்வு கையேடுகளும் வழங்கப்பட்டன.