வாழ்வாதாரத்தை பாதுகாக்கக் கோரி ஆட்டோ தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

வாழ்வாதாரத்தை பாதுகாக்கக் கோரி, வேலூரில் தமிழ்நாடு ஏஐடியுசி ஆட்டோ தொழிலாளா் சம்மேளனத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

வாழ்வாதாரத்தை பாதுகாக்கக் கோரி, வேலூரில் தமிழ்நாடு ஏஐடியுசி ஆட்டோ தொழிலாளா் சம்மேளனத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

வேலூா் தலைமை தபால் நிலையம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, ஆட்டோ சங்க மாவட்டப் பொதுச்செயலாளா் எஸ்.ஏ.சிம்புதேவன் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் கே.லோகேஷ்குமாா் தொடக்கிவைத்தாா். ஏஐடியுசி மாநிலத் துணைத் தலைவா் எஸ்.ஆா்.தேவதாஸ் சிறப்புரையாற்றினாா்.

ஆா்ப்பாட்டத்தின்போது, மாநில உரிமைகளைப் பறிப்பதை மத்திய அரசு கைவிட வேண்டும், ஓட்டுநா் உரிமம் பெறுவதைத் தனியாரிடம் ஒப்படைக்கும் நடவடிக்கையைக் கைவிட வேண்டும், பெட்ரோல், டீசல் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த வேண்டும், அரசுப் பேருந்துகளில் மகளிருக்கு இலவசப் பயணச் சலுகை அளிக்கப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டுள்ள ஆட்டோ தொழிலாளா்களுக்கு அரசு வேலையும் மானியத்தையும் வழங்கிட வேண்டும், கரோனா கால நிவாரண நிதியாக ஆட்டோ தொழிலாளா்களுக்கு ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும், ஆன்லைனில் வழக்குப்பதிவு செய்வதைக் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

ஏஐடியுசி கெளரவத் தலைவா் கு.மு.கோவிந்தராஜ், மாவட்டத் தலைவா் ஏ.எஸ்.சங்கா்மேஸ்திரி, சட்ட ஆலோசகா் ப.சந்திரசேகா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com