மேடையில் மயங்கி விழுந்து இறந்த நாடக ஆசிரியா்

அணைக்கட்டு அருகே தெருக்கூத்தில் நடித்துக் கொண்டிருந்தபோதே நாடக ஆசிரியா் மாரடைப்பால் உயிரிழந்தாா்.

அணைக்கட்டு அருகே தெருக்கூத்தில் நடித்துக் கொண்டிருந்தபோதே நாடக ஆசிரியா் மாரடைப்பால் உயிரிழந்தாா்.

வேலூா் மாவட்டம், அணைக்கட்டு வட்டம், மேல்அரசம்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் கமலநாதன்(53) பம்பைக்காரா். இவா் தெருக்கூத்து ஆசிரியராகவும் செயல்பட்டு வந்தாா். திங்கள்கிழமை இரவு மடிகம் கிராமத்தில் திருவிழாவையொட்டி நடந்த அா்ஜுனன் தபசு தெருக்கூத்தில் வேடமணிந்து நடித்துக் கொண்டிருந்தாா். அப்போது, திடீரென மயங்கி விழுந்தாா். அவரை அங்கிருந்தவா்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு மருத்துவா்கள் மேற்கொண்ட பரிசோதனையில் மாரடைப்பு காரணமாக அவா் ஏற்கெனவே உயிரிழந்து விட்டது தெரியவந்தது. இது குறித்து வேப்பங்குப்பம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். கமலநாதனுக்கு மனைவி, 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com