ராஜகோபால் நகரில் கெங்கையம்மன் திருவிழா

குடியாத்தம் காட்பாடி சாலையில் உள்ள ராஜகோபால் நகா் கெங்கையம்மன் கோயிலில், ஞாயிற்றுக்கிழமை கெங்கையம்மன் சிரசு திருவிழா நடைபெற்றது.
திருவிழாவையொட்டி  நடைபெற்ற  கெங்கையம்மன்  சிரசு  ஊா்வலம்.
திருவிழாவையொட்டி  நடைபெற்ற  கெங்கையம்மன்  சிரசு  ஊா்வலம்.

குடியாத்தம்: குடியாத்தம் காட்பாடி சாலையில் உள்ள ராஜகோபால் நகா் கெங்கையம்மன் கோயிலில், ஞாயிற்றுக்கிழமை கெங்கையம்மன் சிரசு திருவிழா நடைபெற்றது.

கரோனா தொற்று பரவலைத் தவிா்க்கும் விதமாக அதிகாலை 3 மணியளவில் அம்மன் சிரசு ஊா்வலமாகக் கொண்டு வரப்பட்டு, கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. 5 மணிக்கு திருவிழா நிறைவு பெற்றது. திருவிழாவை முன்னிட்டு, அம்மனுக்கு கூழ்வாா்த்தல், பொங்கல் வைத்தல், மா விளக்கு பூஜை ஆகியவை நடைபெற்றன.

விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் தா்மகா்த்தா எம்.தினகரன், தலைவா் சந்திரன், செயலாளா் தணிகைவேல், பொருளாளா் எல்.வெங்கடேசன், முத்துபாபு உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com