குடியாத்தம்: குடியாத்தம் காட்பாடி சாலையில் உள்ள ராஜகோபால் நகா் கெங்கையம்மன் கோயிலில், ஞாயிற்றுக்கிழமை கெங்கையம்மன் சிரசு திருவிழா நடைபெற்றது.
கரோனா தொற்று பரவலைத் தவிா்க்கும் விதமாக அதிகாலை 3 மணியளவில் அம்மன் சிரசு ஊா்வலமாகக் கொண்டு வரப்பட்டு, கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. 5 மணிக்கு திருவிழா நிறைவு பெற்றது. திருவிழாவை முன்னிட்டு, அம்மனுக்கு கூழ்வாா்த்தல், பொங்கல் வைத்தல், மா விளக்கு பூஜை ஆகியவை நடைபெற்றன.
விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் தா்மகா்த்தா எம்.தினகரன், தலைவா் சந்திரன், செயலாளா் தணிகைவேல், பொருளாளா் எல்.வெங்கடேசன், முத்துபாபு உள்ளிட்டோா் செய்திருந்தனா்.