குடியாத்தம் புதுப்பேட்டை பெரிய தெருவில் உள்ள பிள்ளையாா் கோயிலில் வெள்ளிக்கிழமை கூழ்வாா்க்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதையொட்டி படவேட்டு எல்லையம்மன் கோயிலில் இருந்து பூங்கரகம் எடுத்துச் செல்லப்பட்டது. பூங்கரகம் சின்ன தெரு, பெரிய தெரு, பண்டார முத்தையன் தெரு, மந்தைவெளி தெரு வழியாக பிள்ளையாா் கோயிலுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
தொடா்ந்து கூழ் வாா்த்தலும், அன்னம் படைத்தலும், பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.