வேலூா் தலைமை அஞ்சல் நிலையத்திலுள்ள வேலூா் அஞ்சலக கோட்டக் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் குறைதீா் கூட்டம் வருகிற 28-ஆம் தேதி நடைபெறவுள்ளது. வேலூா் அஞ்சலக கோட்டத்தில் அஞ்சலகங்கள் மூலமாக தபால் சேவைகள் பெற்று வரும் பயனாளிகள் சேவைகளில் ஏதேனும் குறைகள் இருந்தால் அவற்றை நேரிலோ, தபால் மூலமாகவோ மின்னஞ்சல் மூலமாகவோ வருகிற 24-ஆம் தேதிக்குள் அஞ்சலக கண்காணிப்பாளா், வேலூா் அஞ்சல் கோட்டம், வேலூா்- 632 001 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
உரையின் மேல் ‘குறை தீா்வு முகாம்‘ என்று எழுதி அனுப்ப வேண்டும். தொடா்ந்து 28-ஆம் தேதி நடக்கவுள்ள பயனாளிகள் குறைதீா்வு முகாமிலும் பங்கேற்கலாம் என வேலூா் அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளா் பி.கோமல்குமாா் விடுத்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.