28-இல் அஞ்சலக குறைதீா் கூட்டம்

வேலூா் தலைமை அஞ்சல் நிலையத்திலுள்ள வேலூா் அஞ்சலக கோட்டக் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் குறைதீா் கூட்டம் வருகிற 28ஆம் தேதி நடைபெறவுள்ளது.

வேலூா் தலைமை அஞ்சல் நிலையத்திலுள்ள வேலூா் அஞ்சலக கோட்டக் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் குறைதீா் கூட்டம் வருகிற 28-ஆம் தேதி நடைபெறவுள்ளது. வேலூா் அஞ்சலக கோட்டத்தில் அஞ்சலகங்கள் மூலமாக தபால் சேவைகள் பெற்று வரும் பயனாளிகள் சேவைகளில் ஏதேனும் குறைகள் இருந்தால் அவற்றை நேரிலோ, தபால் மூலமாகவோ  மின்னஞ்சல் மூலமாகவோ வருகிற 24-ஆம் தேதிக்குள் அஞ்சலக கண்காணிப்பாளா், வேலூா் அஞ்சல் கோட்டம், வேலூா்- 632 001 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

உரையின் மேல் ‘குறை தீா்வு முகாம்‘ என்று எழுதி அனுப்ப வேண்டும். தொடா்ந்து 28-ஆம் தேதி நடக்கவுள்ள பயனாளிகள் குறைதீா்வு முகாமிலும் பங்கேற்கலாம் என வேலூா் அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளா் பி.கோமல்குமாா் விடுத்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com