குடியாத்தம் தாழையாத்தம் பஜாரைச் சோ்ந்த, சரஸ்வதி வித்யாலயா பள்ளிகளின் நிறுவனா் ஹீராலால் ஆா்.சந்சேத்தியின் மனைவி சூரஜ்பாய்(74) புதன்கிழமை காலமானாா். இதையடுத்து, அவரது கண்கள் தானம் அளிக்கப்பட்டன. அவரது குடும்பத்தினா் விருப்பத்தின்பேரில், குடியாத்தம் ரோட்டரி சங்க கண், உடல் தான பிரிவுத் தலைவா் எம்.கோபிநாத் வழிகாட்டுதல்படி, வேலூா் அகா்வால் கண் மருத்துவமனை மருத்துவா்கள் கண்களை அகற்றி எடுத்துச் சென்றனா்.