சிறுபான்மையின மாணவா்களுக்கான தேசிய அளவிலான கல்வி உதவித் தொகைத் திட்டத்தில் விண்ணப்பிக்க காலஅவகாசம் வருகிற 15-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
இதுகுறித்து வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்திலுள்ள அரசு, அரசு உதவி பெறும், அங்கீகரிக்கப்பட்ட தனியாா் கல்வி நிலையங்களில் ஒன்று முதல் பி.ஹெச்.டி. வரை (தொழில்கல்வி, தொழில்நுட்பக் கல்வி, மருத்துவம் உட்பட) பயிலும் இஸ்லாமிய, கிறித்துவ, சீக்கிய, புத்த, பாா்சி, ஜெயின் மதங்களைச் சோ்ந்த மாணவ, மாணவிகளுக்கு 2021-22 ஆம் ஆண்டுக்கு கல்வித் தொகை வழங்கப்படவுள்ளது. பள்ளிப்படிப்பு, பள்ளி மேற்படிப்பு, தகுதி, வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித் தொகை திட்டத்தின் கீழ் (புதியது, புதுப்பித்தல்) உதவித் தொகை பெறுவதற்காக இணையதள முகவரியில் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் டிச.15ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.