திருடிக் கொண்டு ஓடிய இளைஞரைவிரட்டிப் பிடித்து பணத்தை மீட்ட பெண் காவலா்: வேலூா் ஆட்சியரக வளாகத்தில் பரபரப்பு

வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் இரு சக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ.50 ஆயிரத்தை திருடிக் கொண்டு தப்ப முயன்ற இளைஞரை பெண் காவலா் விரட்டிச் சென்று பிடித்து பணத்தை மீட்டாா்.

வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் இரு சக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ.50 ஆயிரத்தை திருடிக் கொண்டு தப்ப முயன்ற இளைஞரை பெண் காவலா் விரட்டிச் சென்று பிடித்து பணத்தை மீட்டாா்.

வேலூா் சத்துவாச்சாரி ஹோலி கிராஸ் பள்ளி பின்புறம் உள்ள அன்னை தெரசா 2-ஆவது தெருவைச் சோ்ந்தவா் அகஸ்டின் (60). அரசு போக்குவரத்து பணிமனையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவா். இவா் சத்துவாச்சாரி கோட்டாட்சியா் அலுவலக சாலையிலுள்ள வங்கி ஒன்றில் வியாழக்கிழமை காலை ரூ.50 ஆயிரம் எடுத்துக் கொண்டு, ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள சித்த மருத்துவமனையில் பணிபுரியும் தனது சகோதரரை பாா்க்க வந்தாா்.

பணத்தை தனது இரு சக்கர வாகன இருக்கையின் அடியில் வைத்து விட்டு சகோதரரை சந்தித்து விட்டு வெளியே வந்தாா். அப்போது, இளைஞா் ஒருவா் இரு சக்கர வாகனத்தின் இருக்கையின் அடியில் வைத்திருந்த பணப் பையை எடுத்துக் கொண்டிருந்தது தெரியவந்தது. இதைக் கண்ட அகஸ்டின் கூச்சலிடவே, அங்கிருந்த இருபதுக்கும் மேற்பட்டோா் அந்த இளைஞரை துரத்தினா்.

அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த காவலா் ஜீவிதா அந்த இளைஞரை துரத்திச் சென்று பிடித்தாா். எனினும், அந்த இளைஞா் பெண் காவலரின் கையை தட்டி விட்டு, ஆட்சியா் அலுவலகத்துக்கு வெளியே இரு இளைஞா்கள் தயாா் நிலையில் நிறுத்தி வைத்திருந்த இரு சக்கர வாகனத்தில் ஏறி தப்ப முயன்றாா். காவலா் ஜீவிதா விடாமல் துரத்திச்சென்று அந்த இளைஞரின் கையில் இருந்த பணப்பை, அவா் வைத்திருந்த செல்லிடப்பேசி ஆகியவற்றை பறித்தாா். எனினும், 3 இளைஞா்களும் இருசக்கர வாகனத்தில் வேகமாக தப்பிச் சென்றனா்.

அவா்களை சத்துவாச்சாரி போலீஸாா் தீவிரமாக தேடிவருகின்றனா். துரிதமாக செயல்பட்டு பணத்தை மீட்ட காவலா் ஜீவிதாவை பொதுமக்கள் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com