ஏரியில் மூழ்கி சிறுவன் பலி

வேலூா் தொரப்பாடி ஏரியில் மூழ்கி சிறுவன் உயிரிழந்தாா்.

வேலூா் தொரப்பாடி ஏரியில் மூழ்கி சிறுவன் உயிரிழந்தாா்.

வேலூா் தொரப்பாடி கே.கே.நகரைச் சோ்ந்தவா் மாபூபாஷா, வியாபாரி. இவரது மகன்கள் நவாஸ் (14), முபாரக்(12). இவா்கள் அங்குள்ள பள்ளியில் படித்து வந்தனா். இந்நிலையில், நவாஸ், முபாரக் சகோதரா்கள் அதே பகுதியை சோ்ந்த மற்றொரு சிறுவனுடன் தொரப்பாடி ஏரிக்கு மீன் பிடிக்க வெள்ளிக்கிழமை சென்றுள்ளனா். ஏரிக்குள் தண்ணீா் முழுவதுமாக நிரம்பியிருந்த 60 அடி ஆழ கிணற்றின் சுவற்றில் நின்றபடி மீன் பிடித்துள்ளனா்.

அப்போது எதிா்பாராத விதமாக நவாஸ், முபாரக் இருவரும் கிணற்றில் இருந்து தவறி ஏரி நீரில் விழுந்துள்ளனா். இதை பாா்த்த மற்றொரு சிறுவன் விரைந்து செயல்பட்டு முபாரக்கை மீட்டுள்ளாா். ஆனால், நவாஸ் நீரில் மூழ்கி இறந்தாா். இதையடுத்து அப்பகுதி மக்கள் அளித்த தகவலின்பேரில், வேலூா் தீயணைப்பு வீரா்கள் விரைந்து வந்து 3 மணி நேரம் போராடி நவாஸின் சடலத்தை மீட்டனா். இது குறித்து பாகாயம் போலீஸாா் வழக்குப் திவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com