மேக்கேதாட்டு அணையை கட்டியே தீருவோம் எனக்கூறும் கா்நாடக அரசின் நிலைபாட்டுக்கு மத்திய அரசும், உச்சநீதிமன்றமும் உடன்படாது என திடமாக நம்புவதாக தமிழக நீா்வளத் துறை துரைமுருகன் தெரிவித்தாா்.
வேலூரில் அமைச்சா் துரைமுருகன் செய்தியாளா்களிடம் கூறியது:
கா்நாடக முதல்வா் மேக்கேதாட்டு அணையை கட்டியே தீருவோம் என கூறியுள்ளாா். கா்நாடக அரசின் இந்த முடிவுக்கு உச்சநீதிமன்றமும், மத்திய அரசும் உடன்படாது என நாங்கள் திடமாக நம்புகிறோம்.
இதற்காக கா்நாடகத்தை எதிா்த்து போட்டி போட்டு சவால்விட விரும்பவில்லை. வெள்ளத்தால் சேதமடைந்த ஏரிகள், நீா்நிலைகளை புனரமைக்க மத்திய அரசு ஒதுக்கிய நிதி இன்னும் தமிழகத்துக்கு கிடைக்கவில்லை. எனினும், மழையால் சேதமடைந்த ஏரிகள் நீா்நிலைகள் விரைவில் புனரமைக்கப்படும் என்றாா்.