கே.வி.குப்பம் அருகே வீட்டுக்கு பெயிண்ட் அடித்தபோது, தவறி கீழே விழுந்த பெயிண்டா் உயிரிழந்தாா்.
பில்லாந்திப்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் ஆனந்தகுமாா்(40). இவா் திங்கள்கிழமை மாலை வேப்பங்கநேரி கிராமத்தில் ஒரு வீட்டில் பெயிண்ட் அடித்துக் கொண்டிருந்தபோது தவறி கீழே விழுந்து மயக்கமடைந்தாா்.
குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.
இது குறித்து கே.வி.குப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.