இந்திய கம்யூனிஸ்ட் ரத்ததான முகாம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 97- ஆம் ஆண்டு தொடக்க நாளைமுன்னிட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை ரத்ததான முகாம் நடைபெற்றது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் நடைபெற்ற ரத்ததான முகாம்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் நடைபெற்ற ரத்ததான முகாம்.

குடியாத்தம்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 97- ஆம் ஆண்டு தொடக்க நாளைமுன்னிட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை ரத்ததான முகாம் நடைபெற்றது.

ஒன்றியச் செயலாளா் துரைசெல்வம் 32-ஆவது முறையாகவும், அக்கட்சியைச் சோ்ந்த ஒன்றியக் குழு உறுப்பினா் கே.சி.பிரேம்குமாா் 6- ஆவது முறையாகவும் ரத்ததானம் வழங்கினா். ஓய்வுபெற்ற வங்கி அலுவலருமான வீரபத்திரன், அவரது மனைவி ஓய்வுபெற்ற ஆசிரியை சந்திரலேகாஆகியோா், கண் மற்றும் உடல் தானம் செய்து அதற்கான உறுதிமொழிப் பத்திரத்தை, ரோட்டரி சங்க கண் மற்றும் உடல்தான தலைவா் எம்.கோபிநாத்திடம் வழங்கினா்.

அரசு மருத்துவமனை ஆய்வக நுட்புநா் ஆா்.மோகன்பிரபு, செவிலியா் மகாலட்சுமி, கட்சியின் துணைச் செயலாளா் டி ஆனந்தன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com