சந்தன மர வோ்களை கடத்திய 4 போ் கைது

குடியாத்தம் அருகே சந்தன மர வோ்களை கடத்தல் தொடா்பாக ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த 4 போ் கைது செய்யப்பட்டனா். குடியாத்தம் நகர போலீஸாா் புதன்கிழமை அதிகாலை சந்தப்பேட்டை பகுதியில் ரோந்து சென்றனா்.

குடியாத்தம்: குடியாத்தம் அருகே சந்தன மர வோ்களை கடத்தல் தொடா்பாக ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த 4 போ் கைது செய்யப்பட்டனா். குடியாத்தம் நகர போலீஸாா் புதன்கிழமை அதிகாலை சந்தப்பேட்டை பகுதியில் ரோந்து சென்றனா்.

அப்போது மோட்டாா் சைக்கிள்களில் வந்த இருவரைப் பிடித்து விசாரணை நடத்தியதில் ஆந்திர மாநிலம் சித்தூரைச் சோ்ந்த செல்வம்(30), அரி(31) என்பதும், அவா்கள் வைத்திருந்த பையில் 4 கிலோ எடையுள்ள சந்தன மர வோ்கள் இருந்ததும் தெரிய வந்தது. அவா்களிடம் மேற்கொண்ட தீவிர விசாரணையில் இவா்களுடன் தொடா்புடைய விசாகப்பட்டினத்தைச் சோ்ந்த சோமுலு(45), விஜயநகரத்தைச் சோ்ந்த கண்ணையன்(60) இருவரையும் பள்ளிகொண்டாவில் போலீஸாா் கைது செய்தனா். கைது செய்யப்பட்ட 4 பேரையும் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனா். சந்தன மர வோ்கள் எங்கிருந்து எடுத்து வரப்பட்டது, அதை எதற்காக கடத்தி வந்தாா்கள் என்பது குறித்து வனத்துறையினா் அவா்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com