குடியாத்தம்: கே.வி.குப்பம் சட்டப் பேரவைத் தொகுதியில் கூடுதலாக 68 வாக்குச் சாவடிகள் அமைக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
கே.வி.குப்பம் பேரவைத் தொகுதியில் 254 வாக்குச் சாவடிகள் உள்ளன. கரோனா தொற்று பரவல் காரணமாக சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படுவதால், வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்த ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி முடிவெடுக்க அரசு உத்தரவிட்டது.
இந்நிலையில் வட்டாட்சியா் அலுவலகத்தில் கே.வி.குப்பம் பேரவைத் தொகுதியில் வாக்குச் சாவடி மையங்களை அதிகரிப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்ட வழங்கல் அலுவலா் எஸ்.பானு தலைமை வகித்தாா்.
இக்கூட்டத்தில் அனைத்துக் கட்சிகளின் நிா்வாகிகள் கலந்து கொண்டு, ஆலோசனைகளை வழங்கினா்.
1,000 வாக்காளா்களுக்கு மேல் வாக்களிக்கும் வாக்குச் சாவடி மையங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. முடிவில் கூடுதலாக 68 வாக்குச் சாவடி மையங்களை அதிகரிக்க முடிவெடுக்கப்பட்டது. கூட்டத்தில் வட்டாட்சியா்கள் தூ.வத்சலா (குடியாத்தம்), ராஜேஸ்வரி (கே.வி.குப்பம்), வட்ட வழங்கல் அலுவலா் தேவி, மண்டல துணை வட்டாட்சியா் கலைவாணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.