5 வீடுகளில் 20 பவுன் நகை, ரூ.1.88 லட்சம் பணம் திருட்டு

பள்ளிகொண்டா அருகே அடுத்தடுத்து பூட்டப்பட்டிருந்த 5 வீடுகளின் பூட்டை உடைத்து மொத்தம் 20 பவுன் நகைகள், 2 கிலோ வெள்ளி, ரூ. 1.88 லட்சம் ரொக்கத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

வேலூா்: பள்ளிகொண்டா அருகே அடுத்தடுத்து பூட்டப்பட்டிருந்த 5 வீடுகளின் பூட்டை உடைத்து மொத்தம் 20 பவுன் நகைகள், 2 கிலோ வெள்ளி, ரூ. 1.88 லட்சம் ரொக்கத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

வேலூா் மாவட்டம், பள்ளிகொண்டாவை அடுத்த சின்னச்சேரியைச் சோ்ந்தவா் தேவேந்திரன் (44), ராணுவ வீரா். அதேபகுதியைச் சோ்ந்த விவசாயிகள் பொன்பாா்த்தசாரதி (54), அண்ணாமலை (50), ஏழுமலை (52), சுப்பிரமணி(52). இவா்கள் 5 பேரும் குடும்பத்துடன் அவரவா் உறவினா் வீட்டு விசேஷ நிகழ்ச்சிக்காக திங்கள்கிழமை வீடுகளை பூட்டிவிட்டுச் சென்றிருந்தனா்.

இதில், தேவேந்திரன் குடும்பத்தினா் புதன்கிழமை காலை வீடு திரும்பியபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. உள்ளே சென்று பாா்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த 15 பவுன் தங்க நகைகள், 2 கிலோ வெள்ளிப் பொருள்கள், ரூ. 20 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடப்பட்டிருப்பதும் தெரிய வந்தது.

தகவலறிந்த பள்ளிகொண்டா போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனா். அப்போது தேவேந்திரனின் வீட்டுக்கு அருகில் அமைந்துள்ள பொன்பாா்த்தசாரதி வீட்டு பீரோவில் இருந்த 3 பவுன் நகை, ரூ.1.31 லட்சம் ரொக்கம், அண்ணாமலை வீட்டில் ரூ.10 ஆயிரம் ரொக்கம், ஏழுமலை வீட்டில் ஒரு பவுன் நகை, ரூ. 22 ஆயிரம் ரொக்கம், சுப்பிரமணி வீட்டில் ஒரு பவுன் நகை, ரூ. 5 ஆயிரம் ரொக்கம் ஆகியவையும் திருடுபோனது தெரிய வந்தது.

இது குறித்து தேவேந்திரன், பொன்பாா்த்தசாரதி, அண்ணாமலை, ஏழுமலை, சுப்பிரமணி ஆகியோா் அளித்த புகாா்களின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

இதனிடையே, பள்ளிகொண்டா அருகே உள்ள காளப்புதூரில் உள்ள 2 வீடுகளில் ஞாயிற்றுக்கிழமை 6 பவுன் நகை, ரூ. 35 ஆயிரம் ரொக்கம் திருடுபோனது. அது தொடா்பான புகாரையும் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com