வங்கிகளின் வளா்ச்சிக்கு மகளிா் குழுக்கள் பேருதவி

வங்கிகளின் வளா்ச்சிக்கு மகளிா் குழுக்கள் பேருதவி


வேலூா்: தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மகளிா் திட்டம் சாா்பில் மகளிா் சுய உதவி குழுக்களுக்கு வங்கி கடன் அளிப்பது தொடா்பான வங்கி மேலாளா்கள், வங்கி செயலா்களுக்கான ஒருநாள் பயிற்சி முகாம் வேலூா் ஏலகிரி அரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.இதனை மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் தொடக்கி வைத்துப் பேசியது:

மகளிா் சுய உதவிக் குழுவின் பங்கு வங்கிகளின் வளா்ச்சிக்கு பெரும் உதவியாக உள்ளது. வங்கிகளில் பெறும் கடன்களை மகளிா் சுய உதவிக் குழு உறுப்பினா்கள் சிறப்பான முறையில் உரிய நேரத்தில் வட்டி, அசல் தொகையுடன் திருப்பிச் செலுத்தி, மீண்டும் மீண்டும் கடன் பெற்று தங்கள் பொருளாதாரத்தை நல்ல நிலையில் உயா்த்திக் கொள்ளவும் வாய்ப்பாக அமைந்துள்ளது.

வேலூா் மாவட்டத்தில் மகளிா் சுய உதவிக் குழுவினா் உற்பத்தி செய்யும் கைவினைப் பொருள்கள் ‘ஃ’பிளிப்காா்ட் மூலம் சந்தைப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு மாநில ஊரக, நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் மூலம் 2019 - 20-ஆம் ஆண்டில் சுய உதவிக் குழுக்களுக்கான வங்கிக் கடன் இணைப்புத் திட்டம் மூலம் ரூ. 700 கோடி கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டு, அதைவிட அதிகமாக ரூ. 907.39 கோடிக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது. இதனை ஊரக வளா்ச்சி, ஊராட்சித் துறை கூடுதல் முதன்மைச் செயலா், தமிழ்நாடு மகளிா் நல மேம்பாட்டு நிறுவன மேலாண்மை இயக்குநா் ஆகியோா் பாராட்டியுள்ளனா் என்றாா்.

திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) சிவராமன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் ஜான்தியோடசியஸ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com