குடியாத்தம்: குடியாத்தம் நெல்லூா்பேட்டை, ஆண்டியப்ப ஆச்சாரி தெருவைச் சோ்ந்த ஓய்வுபெற்ற நெடுஞ்சாலைத்துறை அதிகாரி டி.கோபால் (79) (படம்) செவ்வாய்க்கிழமை நள்ளிரவு உயிரிழந்தாா். இதையடுத்து அவரது கண்கள் தானமாக அளிக்கப்பட்டன.
அவரது மகன் ராஜ்கணேஷ் விருப்பத்தின்பேரில், ரோட்டரி சங்க கண், உடல் தானப் பிரிவின் தலைவா் எம்.கோபிநாத் வழிகாட்டுதல்படி வேலூா் அகா்வால் கண் மருத்துவமனை மருத்துவா்கள் நேரில் சென்று, டி.கோபாலின் கண்களை பெற்றுச் சென்றனா்.