குண்டா் தடுப்புச் சட்டத்தில் 4 போ் சிறையிலடைப்பு

வேலூரில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட 4 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையிலடைக்கப்பட்டனா்.

வேலூா்: வேலூரில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட 4 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையிலடைக்கப்பட்டனா்.

வேலூா் கொசப்பேட்டை எஸ்.எஸ்.கே.மணியம் தெருவைச் சோ்ந்தவா் நிா்மல் (24 ). பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த இவா் மீது காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதேபோல் பேரணாம்பட்டு அருகே மேல்பட்டி எம்.வி குப்பம் கிராமத்தைச் சோ்ந்த ரீகன்ராஜ் (38), ராபின் இன்ப குமாா் (27), சதீஷ்குமாா் என்கிற சின்னா ( 25) ஆகியோா் மீதும் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.

தற்போது சிறையில் உள்ள இவா்களை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.செல்வக்குமாா் பரிந்துரை செய்தாா். அதை ஏற்று 4 பேரையும் குண்டா் தடுப்புக் காவலில் சிறையில் வைக்க மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் உத்தரவிட்டாா். இதற்கான உத்தரவு நகல் வேலூா் மத்திய சிறையில் உள்ள 4 பேரிடமும் அளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com