வேலூா் மாவட்டத்தில் உள்ள ஆதி திராவிடா் நலத்துறை விடுதிகளில் சேர தகுதியுடைய மாணவ, மாணவிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து, மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
ஆதி திராவிடா் நலத்துறையின் கீழ் வேலூா் மாவட்டத்தில் இயங்கும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் விடுதிகளில் காலியாக உள்ள இடங்களுக்கு 2020-21ஆம் கல்வியாண்டுக்கு மாணவ, மாணவிகள் விகிதாசார அடிப்படையில் சோ்க்கப்பட உள்ளனா். இந்த விடுதிகளில் பயிலும் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் உணவு, தங்குமிட வசதியும் வழங்கப்பட உள்ளது. மேலும், 10, 12-ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு வழிகாட்டி, வினா வங்கி கையேடு ஆகியவையும் வழங்கப்படும்.
இவ்விடுதிகளில் சேர மாணவா்களின் பெற்றோா் ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். அனைத்து விடுதிகளிலும் இலங்கைத் தமிழா்களின் வாரிசுகளுக்கு 5 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இவ்விடுதிகளில் சேர விரும்பும் மாணவ, மாணவிகள் சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளா், ஆதி திராவிடா் நல தனி வட்டாட்சியா் அலுவலகங்கள், ஆதிதிராவிடா் பழங்குடியினா் நல அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்று பூா்த்தி செய்து அதே அலுவலகங்களில் வரும் 24-ஆம் தேதிக்குள் அளிக்கலாம்.