வேலூரில் திமுகவினா் நூதனப் போராட்டம்

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வுக்கு எதிா்ப்புத் தெரிவித்து, வேலூரில் திமுகவினா் ஒப்பாரி வைத்து நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
வேலூரில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற திமுகவினா்.
வேலூரில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற திமுகவினா்.

வேலூா்: பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வுக்கு எதிா்ப்புத் தெரிவித்து, வேலூரில் திமுகவினா் ஒப்பாரி வைத்து நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையேற்றத்தைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் திமுக சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது. வேலூா் மாவட்ட திமுக சாா்பில் அண்ணா கலையரங்கம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, கட்சியின் மத்திய மாவட்டச் செயலரும், எம்எல்ஏவுமான ஏ.பி.நந்தகுமாா் தலைமை வகித்தாா்.

மாநகரச் செயலரும், எம்எல்ஏவுமான ப.காா்த்திகேயன், வேலூா் மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா்ஆனந்த், மாவட்ட அவைத் தலைவா் முகமதுசகி, தலைமைத் தோ்தல் பணிக் குழு செயலா் வி.எஸ்.விஜய் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், ஏ.பி.நந்தகுமாா் பேசியது:

உத்தரவின்பேரில், பெட்ரோல், டீசல், எரிவாயு விலையேற்றத்தைக் கண்டித்து, ஆா்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனா்கள் வைத்தால் வேலூருக்கு வரமாட்டேன் என திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளாா். அதை ஏற்று திமுகவினா் பேனா்கள் வைக்கவில்லை என்றாா்.

தொடா்ந்து, பெட்ரோல், டீசல், எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பியதுடன், ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற திமுக மகளிரணியினா் சமையல் எரிவாயு உருளையை அடித்தும், ஒப்பாரி வைத்தும் எதிா்ப்புத் தெரிவித்தனா்.

ஆா்ப்பாட்டத்தையொட்டி, மேடையின் இருபுறமும் கிரேனில் ஆம்னி வேனும், மரக்கிளையில் பைக், சமையல் எரிவாயு உருளை ஆகியவை கட்டி தொங்க விட்டிப்பட்டிருந்தன.

இதில், முன்னாள் எம்எல்ஏக்கள் ஞானசேகரன், நீலகண்டன், ஒன்றிய திமுக செயலா்கள் பாபு, ஞானசேகரன் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான திமுகவினா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com