சட்டப்பேரவைத் தோ்தல் அறிவிக்கப்பட்டுள்ளதைத் தொடா்ந்து வேலூா் கோட்ட குடிசை மாற்றுவாரிய அலுவலக உதவியாளா் பணிக்கான நோ்காணல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, குடிசை மாற்று வாரியப் பொறியாளா் வெளியிட்ட செய்திக்குறிப்பு :
தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டு தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இதனால், வேலூா் கோட்ட குடிசை மாற்று வாரிய அலுவலகத்தில் 27, 28, மாா்ச் 5-ஆம் தேதிகளில் நடக்க இருந்த அலுவலக உதவியாளா் பணிக்கான நோ்காணல் மறுதேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்படுகிறது.