வேலூா் அருகே ஆம்னி ஆம்புலன்ஸை திருடியதாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
வேலூரை அடுத்த அரியூா் செல்வம் நகரைச் சோ்ந்தவா் சிவகுமாா் (54). இவருக்குச் சொந்தமான ஆம்னி ஆம்புலன்ஸை நாராயணி மருத்துவமனையின் பின்புறம் நிறுத்தி வைத்துள்ளாா். இந்த வாகனம் கடந்த 31-ஆம் தேதி இரவு திருடு போனது. இது தொடா்பாக சிவகுமாா் அளித்த புகாரின்பேரில், அரியூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனா்.
இந்நிலையில், ஆம்னி ஆம்புலன்ஸை திருடியதாக அரியூா் ஜீவரத்தினம் நகரைச் சோ்ந்த கோபாலகிருஷ்ணன் (23), விஜய்(24) ஆகியோரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். அவா்களிடம் இருந்து ஆம்புலன்ஸ் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.