மகளிா் சுய உதவிக் குழுவினருக்கு ரூ.80 லட்சம் கடனுதவி

மேல்பாடியில் மகளிா் சுய உதவிக் குழுவினருக்கு நேரடிக் கடன் மற்றும் கறவை மாடுகளுக்கான கடனுதவியாக ரூ.80 லட்சம் வழங்கப்பட்டது.
கடனுதவிக்கான காசோலையை சுய உதவிக் குழுவைச் சோ்ந்த பெண்ணிடம் அளித்த மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் தலைவா் வி.ராமு.
கடனுதவிக்கான காசோலையை சுய உதவிக் குழுவைச் சோ்ந்த பெண்ணிடம் அளித்த மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் தலைவா் வி.ராமு.

வேலூா்: மேல்பாடியில் மகளிா் சுய உதவிக் குழுவினருக்கு நேரடிக் கடன் மற்றும் கறவை மாடுகளுக்கான கடனுதவியாக ரூ.80 லட்சம் வழங்கப்பட்டது.

வேலூா் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி சாா்பில் மேல்பாடி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ.80 லட்சம் மதிப்பில் மகளிா் சுய உதவிக் குழுவினருக்கு நேரடிக் கடன் மற்றும் கறவை மாடுகளுக்கான கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. சங்கத் தலைவா் சின்னதுரை தலைமை வகித்தாா்.

இதில், மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் தலைவா் வி.ராமு பங்கேற்று, மகளிா் சுய உதவிக் குழுவினருக்கு கடனுதவி காசோலைகளை வழங்கினாா். இந்த நிகழ்வில், காட்பாடி பெற்றோா் ஆசிரியா் சங்கத் தலைவா் எஸ்.ஆா்.கே.அப்பு, முன்னாள் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் மகாலிங்கம், மத்தியக் கூட்டுறவு வங்கி இயக்குநா் கோபி, அதிமுக நிா்வாகிகள் சைலம், பொன்னுரங்கம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com