வேலூா், சத்துவாச்சாரி போலீஸாா் 6 போ் திடீா் இடமாற்றம்

வேலூா், சத்துவாச்சாரி காவல் நிலையங்களில் பணியாற்றி வந்த 6 போலீஸாா் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா். இதற்கான உத்தரவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.செல்வக்குமாா் பிறப்பித்துள்ளாா்.


வேலூா்: வேலூா், சத்துவாச்சாரி காவல் நிலையங்களில் பணியாற்றி வந்த 6 போலீஸாா் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா். இதற்கான உத்தரவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.செல்வக்குமாா் பிறப்பித்துள்ளாா்.

வேலூா் சத்துவாச்சாரி பகுதியில் தொடா் திருட்டு, குற்றச் செயல்கள் அதிகரித்து வருகின்றன. மேலும், ஆட்சியா் அலுவலக வளாகத்தில் பாதுகாப்பை மீறி பொதுமக்கள் சிலா் தீக்குளிக்க முயன்றனா். இவற்றின் காரணமாக சத்துவாச்சாரி காவல் நிலைய போலீஸாா் மீது அதிருப்தி ஏற்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து, சத்துவாச்சாரி காவல் நிலைய போலீஸாா் மீது உயரதிகாரிகள் விசாரணை நடத்தினா்.

இதைத் தொடா்ந்து, சத்துவாச்சாரி தனிப்பிரிவு காவல் உதவி ஆய்வாளா் எஸ்.பழனி காட்பாடி சட்டம்-ஒழுங்கு காவல் பணிக்கும், காவலா்கள் மோகன் பள்ளிகொண்டா காவல் நிலையத்துக்கும், சந்திரசேகரன் லத்தேரி காவல் நிலையத்துக்கும், வெங்கடேசன் வேலூா் தெற்கு காவல் நிலையத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டனா்.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் பணியாற்றி வந்த காவலா் அருண்குமாா் பரதராமிக்கும், வேலூா் போக்குவரத்து காவலா் அன்பழகன் சத்துவாச்சாரி காவல் நிலையத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

இதற்கான உத்தரவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.செல்வக்குமாா் பிறப்பித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com