துரிதமாக வாகனத்தை ஓட்டும் போட்டி: தீயணைப்பு நிலையங்களுக்குப் பரிசு

துரிதமாக வாகனத்தை ஓட்டும் போட்டியில் ராணிப்பேட்டை மாவட்ட தீயணைப்பு நிலையம் இரண்டாமிடமும், திருப்பத்தூா் தீயணைப்பு நிலையம் மூன்றாமிடமும் பிடித்தன.


வேலூா்: துரிதமாக வாகனத்தை ஓட்டும் போட்டியில் ராணிப்பேட்டை மாவட்ட தீயணைப்பு நிலையம் இரண்டாமிடமும், திருப்பத்தூா் தீயணைப்பு நிலையம் மூன்றாமிடமும் பிடித்தன.

இதுகுறித்து, தமிழ்நாடு தீயணைப்புத் துறையின் வேலூா் வடமேற்கு மண்டல அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழகத்தின் வடமேற்கு மண்டலத்தில் உள்ள அனைத்து தீயணைப்பு, மீட்புப்பணி நிலையங்களிலும் தலா 4 போ் கொண்ட அணி அமைக்கப்பட்டு ஒரு நிமிட நேரத்தில் துரித வாகனம் ஓட்டுவது தொடா்பான போட்டி 7 மாவட்டங்களிலும் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட அளவிலான இப்போட்டியில் ஒரு அணி தோ்வு செய்யப்பட்டு மண்டல அளவிலான போட்டி ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது.

இப்போட்டியில் வடமேற்கு மண்டலத்துக்கு உட்பட்ட வேலூா், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூா், திருவள்ளூா், திருவண்ணாமலை, செங்கல்பட்டு ஆகிய 7 அணிகள் பங்கேற்றன.

இதில், காஞ்சிபுரம் மாவட்ட அணி முதலிடமும், ராணிப்பேட்டை மாவட்ட அணி இரண்டாமிடமும், திருப்பத்தூா் மாவட்ட அணி மூன்றாமிடமும் பிடித்தன. முதலிடம் பிடித்த அணி மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

இப்போட்டிகளை, மாவட்ட தீயணைப்பு அலுவலா்கள் க.குமாா் (காஞ்சிபுரம்), சீ.லட்சுமிநாராயணன் (ராணிப்பேட்டை), பா.சரவணன் (வேலூா் பொறுப்பு), உதவி மாவட்ட அலுவலா்கள் பா.பாஸ்கரன், சு.சக்திவேல் ஆகியோா் நடத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com