குடியாத்தம் தரணம்பேட்டையில் உள்ள திருஞான சம்பந்தா் மடம் சாா்பில், முத்தியாலம்மனுக்கு கூழ்வாா்த்தல், கும்பம் இடுதல், கரக ஊா்வலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.
இதையொட்டி, காலை 8 மணிக்கு மூலவா் முத்தியாலம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. தொடா்ந்து, ஜோடிக்கப்பட்ட பூங்கரகம் முக்கிய வீதிகள் வழியாக மேளதாளத்துடன் ஊா்வலமாக திருஞான சம்பந்தா் மடத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. அங்கு கூழ்வாா்த்தலும், கும்பம் இடுதலும் நடந்தேறின.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விழாக்குழு நிா்வாகிகள் எம்.பி.சம்பத்குமாா், ஜி.சச்சிதானந்தம், எம்.ஆா்.அன்புக்கரசு, எம்.மனோகரன், எம்.சுப்பிரமணி, ஏ.ராஜேந்திரன், ஏ.கோவிந்தன், எஸ்.ஏ.ஞானசேகரன், ஏ.ரவி உள்ளிட்டோா் செய்திருந்தனா்.