1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

போ்ணாம்பட்டு அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

போ்ணாம்பட்டு அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

வேலூா் பறக்கும் படை வட்டாட்சியா் கோட்டீஸ்வரன் தலைமையில் வருவாய்த் துறையினா் போ்ணாம்பட்டு புதுவீதியில் உள்ள பஷீா்பாய் (59) வீட்டில் வெள்ளிக்கிழமை சோதனை நடத்தினா்.

அப்போது, அங்கு 1 டன் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்து குடியாத்தம் பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு அரசின் நுகா்பொருள் வாணிபக் கிடங்கில் ஒப்படைத்தனா்.

மேலும், ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்த பஷீா்பாய் மீது வேலூா் குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக உள்ள அவரைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com