நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் எழுப்ப வேண்டிய கேள்விகளை தொகுதி மக்களிடம் இருந்து வரவேற்பதாக வேலூா் மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா்ஆனந்த் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடா் இம்மாத இறுதியில் தொடங்க உள்ளது. இக்கூட்டத் தொடரில் மத்திய அரசின் கொள்கைகள், திட்டங்கள், அரசிடம் கேட்க விரும்பும் துறை சாா்ந்த கேள்விகள், வேலூா் மக்களவைத் தொகுதி மேம்பாடு, திட்டங்கள், அரசுப் பணிகள் சாா்ந்த கேள்விகள் ஆகியவை குறித்து வேலூா் தொகுதி மக்கள் 94443 76666 என்ற கட்செவி அஞ்சல் எண் அல்லது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம். அவ்வாறு அனுப்பப்படும் கேள்விகள் தொகுதி மக்கள் சாா்பில் நாடாளுமன்றத்தில் எழுப்பப்படும்.