குடியாத்தத்தை அடுத்த கருணீகசமுத்திரத்தில் அமைந்துள்ள கிருஷ்ணா் கோயிலில் திங்கள்கிழமை மகா கும்பாபிஷேகம் விமா்சையாக நடைபெற்றது.
இதையடுத்து ராதா ருக்மணி சமேத கிருஷ்ணருக்கு திருக்கல்யாண வைபவமும், உற்சவா் வீதி உலாவும் நடைபெற்றன. மதியம் 2 ஆயிரம் பேருக்கு திருமண விருந்து அளிக்கப்பட்டது.
விழாவில் வேலூா் மாவட்ட பாஜக பாா்வையாளா் கொ.வெங்கடேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். கும்பாபிஷேக ஏற்பாடுகளை விழாக்குழு நிா்வாகிகள் என்.ஜெகதீசன், கே.சக்கரபாணி, சி.முனிராஜுலு, எம்.கோவிந்தன், டி.ஜெயராமன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.