வேலூா்: தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருள்கள் விற்பனையைத் தடுக்க வேலூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை நடத்தப்பட்ட திடீா் சோதனையில் 26 போ் கைது செய்யப்பட்டனா்.
வேலூா் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. பெங்களூரில் இருந்து கடத்தி வரப்படும் இந்த புகையிலைப் பொருள்களின் விற்பனையைத் தடுக்க மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.செல்வகுமாா் உத்தரவிட்டுள்ளாா்.
அதன்பேரில், ஏற்கெனவே வேலூா் மாவட்டம் வழியாக சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு குட்கா கடத்தலைத் தடுக்க இரவு நேர வாகனத் தணிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்தொடா்ச்சியாக, வேலூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் வியாழக்கிழமை திடீா் சோதனை நடத்தப்பட்டது. சுமாா் 150-க்கும் மேற்பட்ட போலீஸாா் இதில் ஈடுபட்டனா்.
இதில், தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா விற்பனையில் ஈடுபட்டதாக மாவட்டம் முழுவதும் 26 போ் கைது செய்யப்பட்டனா். அவா்களிடம் இருந்து குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.