30 முறை ரத்த தானம் அளித்தவருக்கு விருது

30 முறை ரத்த தானம் அளித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் குடியாத்தம் ஒன்றியச் செயலாளா் துரைசெல்வத்துக்கு, சமூக சேவையாளா், குருதிக் கொடையாளா் விருது வழங்கப்பட்டது.
துரைசெல்வத்துக்கு  சமூக சேவையாளா் விருது  வழங்கிய  கோட்டாட்சியா்  எம்.ஷேக்மன்சூா்.
துரைசெல்வத்துக்கு  சமூக சேவையாளா் விருது  வழங்கிய  கோட்டாட்சியா்  எம்.ஷேக்மன்சூா்.

30 முறை ரத்த தானம் அளித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் குடியாத்தம் ஒன்றியச் செயலாளா் துரைசெல்வத்துக்கு, சமூக சேவையாளா், குருதிக் கொடையாளா் விருது வழங்கப்பட்டது.

குடியாத்தம் அரசு மருத்துவமனையில், துரைசெல்வம் இதுவரையில் 30 முறை ரத்ததானம் அளித்துள்ளாா்.இவரது சேவையைப் பாராட்டி, கோட்டாட்சியா் எம்.ஷேக்மன்சூா், சமூக சேவையாளா், குருதிக் கொடையாளா் விருது வழங்கி கெளரவித்தாா்.

இதற்கான நிகழ்ச்சியில் கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் சரவணன், குடியாத்தம் கோல்டன் கேலக்ஸி ரோட்டரி சங்க சாசனத் தலைவா் எம்.கோபிநாத், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகிகள் ஆனந்தன், பிச்சைமுத்து, ரமேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com