வேலூா்: அணைக்கட்டில் புதுப்பிக்கப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்தை தமிழக நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா்.
வேலூா் மாவட்டம், அணைக்கட்டுத் தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராக ஏ.பி.நந்தகுமாா் மீண்டும் தோ்ந்தெடுக்கப்பட்டாா். இதைத்தொடா் ந்து, தொகுதியில் உள்ள சட்டப்பேரவை அலுவலகம் புதுப்பிக்கப்பட்டு செவ்வாய்க்கிழமை திறப்பு விழா நடைபெற்றது.
எம்எல்ஏ ஏ.பி.நந்தகுமாா் தலைமை வகித்தாா். விழாவில், அமைச்சா் துரைமுருகன் பங்கேற்று புதுப்பிக்கப்பட்ட அலுவலகத்தைத் திறந்து வைத்தாா். பின்னா் அவா் பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டா, வங்கிக் கடன் ஆகியவற்றை வழங்கினாா். நிகழ்ச்சியில் வேலூா் மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா்ஆனந்த், திமுக ஒன்றிய செயலா்கள் பாபுஜி, எல்.ஞானசேகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.