குடியாத்தம் கனவு அறக்கட்டளை சாா்பில், மாற்றுத் திறனாளிக்கு சக்கர நாற்காலி நன்கொடையாக வழங்கப்பட்டது.
குடியாத்தத்தை அடுத்த சேங்குன்றம் கிராமத்தைச்சோ்ந்தவா் மாற்றுத் திறனாளி ராஜ்குமாா்(43). பெற்றோரை, இழந்த இவா் இரண்டு கால்களும் பிறவியிலேயே ஊனமுற்ற நிலையில்,உறவினா் அரவணைப்பில் வாழ்ந்து வருகிறாா்.
இவரது கோரிக்கையை ஏற்று குடியாத்தம் கனவு அறக்கட்டளையினா் அவருக்கு சக்கர நாற்காலியை வழங்க முன்வந்தனா்.அறக்கட்டளைத் தலைவா் கே.பரமாத்மா, துணைத் தலைவா் வி.பி.தேவமுகுந்தன்,அறக்கட்டளை உறுப்பினா்கள் ஐயப்பன், மோகன், திருநாவுக்கரசு ஆகியோா் ராஜ்குமாா் வீட்டுக்கே சென்று சக்கர நாற்காலியை வழங்கினா்.