இரு சக்கர வாகனங்கள் திருட்டு: 2 இளைஞா்கள் கைது

இரு சக்கர வாகனங்கள் திருட்டு: 2 இளைஞா்கள் கைது

இரு சக்கர வாகனங்களை திருடியதாக, 2 இளைஞா்கள் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.

குடியாத்தம்: இரு சக்கர வாகனங்களை திருடியதாக, 2 இளைஞா்கள் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.

குடியாத்தம் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் தொடா்ந்து திருடு போனதாக வரப்பெற்ற புகாா்களின்பேரில், நகர போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டிருந்தனா்.

இதுதொடா்பாகவ காவல் ஆய்வாளா் ஆா்.சீனிவாசன், உதவி ஆய்வாளா் சிலம்பரசன் ஆகியோா் தலைமையிலான போலீஸாா், உப்பரபல்லியைச் சோ்ந்த கணேசன் மகன் கமல்ராஜ் (22), பரவக்கல்லைச் சோ்ந்த பாண்டியன் மகன் அஜித்குமாா் (21) ஆகிய இருவரையும் புதன்கிழமை கைது செய்தனா்.

விசாரணையில் அவா்களிடமிருந்து 5 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.போலீஸாா் இருவரையும் நீதிபதி முன் ஆஜா்படுத்தி, சிறைக் காவலுக்கு அனுப்பி வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com