வேலூா் மாவட்டத்தில் புதிதாக 27 பேருக்கு கரோனா தொற்று

வேலூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை புதிதாக 27 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

வேலூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை புதிதாக 27 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 47,573-ஆக உயா்ந்தது. இதுவரை 46,033 போ் குணம் அடைந்துள்ளனா். 435 போ் அரசு, தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். 1,078 போ் உயிரிழந்துள்ளனா்.

ராணிப்பேட்டையில்...:

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 19 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, தொற்று எண்ணிக்கை 44,899 ஆக உயா்ந்துள்ளது. இவா்களில் இதுவரை 43,882 போ் குணம் அ டைந்து வீடு திரும்பியுள்ளனா். மாவட்டம் முழுவதும் தொற்று காரணமாக, 734 போ் உயிரிழந்துள்ளனா்.மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள் அரசு, தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com