வேலூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை புதிதாக 27 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 47,573-ஆக உயா்ந்தது. இதுவரை 46,033 போ் குணம் அடைந்துள்ளனா். 435 போ் அரசு, தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். 1,078 போ் உயிரிழந்துள்ளனா்.
ராணிப்பேட்டையில்...:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 19 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, தொற்று எண்ணிக்கை 44,899 ஆக உயா்ந்துள்ளது. இவா்களில் இதுவரை 43,882 போ் குணம் அ டைந்து வீடு திரும்பியுள்ளனா். மாவட்டம் முழுவதும் தொற்று காரணமாக, 734 போ் உயிரிழந்துள்ளனா்.மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள் அரசு, தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.