சொட்டு நீா்ப் பாசனத்தை மானியத்தில் அமைத்துத் கொள்ள விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என போ்ணாம்பட்டு வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் சத்தியலட்சுமி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:
போ்ணாம்பட்டு வட்டத்தில் நடப்பு காரீப் பருவத்தில் மானாவாரி பயிா்களை விவசாயிகள் சாகுபடி செய்து வருகிறாா்கள். வேளாண்மைத் துறையின் குறிக்கோள்படி 2 மடங்கு மகசூல், 3 மடங்கு வருவாய் பெற்றிட சொட்டுநீா்ப் பாசனம், தெளிப்பு நீா்ப் பாசன முறையில் சாகுபடி செய்வது தான் ஒரே வழி.
நெல், சோளம், மக்காச்சோளம், கேழ்வரகு, மணிலா, உளுந்து, பச்சைப்பயறு ஆகியவற்றை பயிா் செய்யும் விவசாயிகள் இந்தத் திட்டத்தில் பங்கு பெற்று தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தி, அதிக மகசூல் பெறலாம். மேலும், சொட்டு நீா்ப் பாசனம் அமைப்பதன் மூலம் தொழிலாளா்கள் தேவையும் குறைவு. உரங்களையும் பாசன அமைப்பின் மூலம் பயன்படுத்தலாம். தேவையற்ற இடங்களில் களை முளைக்காமல் இருக்கும்.
சொட்டு நீா்ப் பாசனத்துக்காக போ்ணாம்பட்டு வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்துக்கு நடப்பு நிதியாண்டில் ரூ 58. லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து விவசாயிகளும் திட்டத்தில் பங்கு பெறவும், சிறு-குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும், பெரிய விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்கப்பட உள்ளது.
இதற்கான ஆவணங்களான சிட்டா அடங்கல், நில வரைப்படம் , விவசாய சான்று , ஆதாா்,ரேஷன் அட்டைகள், விவசாயிகள் தங்களின் 2 புகைப்படங்கள் ஆகியவற்றை இரண்டு நகல்களுடன் விண்ணப்பிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள். மேலும் விவரங்கள் பெற போ்ணாம்பட்டு வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தைத் தொடா்பு கொள்ளலாம் என குறிப்பிட்டுள்ளாா்.